எங்கள் திருமண தகவல் மையம் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. எங்கள் மையத்தில் அனைத்து இனத்தவரும் தங்களின் வரன்களை இலவசமாக பதியலாம். பதிவுக்கட்டணம் மற்றும் புரோக்கர் கமிஷன் கிடையாது.பதிவு செய்வதற்கு வரனின் பயோடேட்டா மற்றும் ஜாதகம் போதுமானது. வரன்களை போட்டோவுடன் பதிவு செய்வது விரும்பத்தக்கது. வரன்களை எங்கள் அலுவலகத்தில் நேரிலும், தபால் அல்லது இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம்.
நேரிலும், தபால் மூலமும் பதிவு செய்தவர்களுக்கு மூன்று நாட்களிலும், இணையதளத்தில் வரன் பதிவு செய்தவர்களுக்கு உடனேயும் பதிவு எண் மற்றும் ரகசிய குறியீடு வழங்கப்படும்.இணையதளத்தில் தேர்வு செய்த வரனின் விபரம் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் பெற சேவை கட்டணம் செலுத்த வேண்டும். சேவை கட்டணம் எங்கள் அலுவலகத்தில் நேரிலும், மணியாடரிலும் அல்லது எங்கள் வங்கி கணக்கிலும் செலுத்தலாம். மணியாடரிலும் அல்லது எங்கள் வங்கி கணக்கிலும் செலுத்தியவர்கள் அதன் விபரத்தை எங்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
தபால் மூலம் வரன்களின் விபரம் பெற சேவை கட்டணத்துடன் தபால் கட்டணமும் செலுத்த வேண்டும். சேவை மற்றும் தபால் கட்டணம் செலுத்தியவர்களுக்கு வரன்களின் விபரம் மூன்று நாட்களுக்குள் அனுப்பிவைக்கப்படும்.எங்கள் சேவை வரன்கள் பற்றி தகவல் தருவது மட்டுமே. வரன்கள் பற்றி நன்கு விசாரித்து முடிவு செய்ய வேண்டியது மணமக்கள் வீட்டாரின் பொறுப்பாகும். திருமணம் நிச்சயம் முடிந்தவுடன் எங்களுக்கு தெரியபடுத்தவும்.